விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா?
விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் மீது கோழியை வீசி சோதிக்கப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேர் உயிரிழந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்திற்கு, பறவைகள் விமானத்தின் மீது மோதியதும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாகவும், பறவை விமானத்தின் மோதி பல்வேறு விமான விபத்துகள் ஏற்பட்டு, பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது.
விமானம் பறக்கும் வேகத்திற்கு விமானத்தின் மீது பறவைகள் மோதினால், விமானத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதே போல், விமான என்ஜினுக்குள் பறவை சிக்கிக்கொண்டால், விமான விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் பறவைகள் விமானம் மீது மோதும் சம்பவங்கள் ஆண்டுக்கு 10,000 முறை நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கோழி சோதனை
இதனால், ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில், விமானம் பறப்பதற்கு முன்னர் கோழியை வைத்து சோதனை(Chicken Gun Test) ஒன்று நடத்தப்படுகிறது.
இறந்த கோழி ஒன்றை பீரங்கி போன்ற அமைப்பு மூலம், 300 கி.மீ வேகத்தில் விமானத்தின் பல்வேறு பகுதிகளில் வீசி சோதனை நடத்தப்படுகிறது.
விமானியின் முன்னர் உள்ள கண்ணாடி, பயணியின் இருக்கைகள் அருகே உள்ள கண்ணாடி, விமானத்தின் இறக்கைகள், விமான என்ஜின் ஆகியவற்றின் மீது இந்த கோழி சோதனை நடத்தப்படுகிறது.
இதன் மூலம் விமானத்தின் கண்ணாடிகளில் விரிசல்கள் ஏற்படுகிறதா, இறக்கைகளில் சேதம் ஏற்படுகிறதா என சோதிக்கப்படுகிறது.
இன்ஜின் மீது பறவை மோதிய பிறகும் அந்த எஞ்சின் தனது 75% திறனில், குறைந்தது 2 நிமிடங்களுக்கு இயங்க வேண்டும்.
இந்த சோதனைகளில் விமானம் தேர்ச்சியடைந்த பிறகே வானில் பறக்க அனுமதிக்கப்படும்.
இது போன்று விமானம் பறப்பதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்பாராத விதமாக விமான விபத்துகள் ஏற்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |