கிரிக்கெட் வீரர்கள் ஏன் நாய்களை போல குரைக்கிறார்கள்! ரோகித் சர்மாவை வம்பிழுத்த பிரபல நடிகை.. சர்ச்சையை கிளப்பிய பதிவு
இந்தியாவில் நடக்கும் விவசாய போராட்டம் தொடர்பாக ரோகித் சர்மாவின் பதிவுக்கு சர்ச்சையளிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனவத் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் இளம் சுற்றுச்சுழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உட்பட பல சர்வதேச பிரபலங்கள் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கருத்துகளை இந்திய பிரபலங்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் மத்திய அரசுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை கொடுத்துள்ளது.
இந்தியாவில் தீவிரமாக பேசப்பட்ட விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தார். இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வலுத்தது. இது எங்கள் நாட்டின் விஷயம், இதில் நீங்கள் தலையீட வேண்டாம் என்று பலர் எதிர் கருத்துகளை பதிவிட்டனர்.
இந்திய அணி நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது இந்தியா வலுவாக இருக்கிறது. (விவசாயிகள்) பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. நாட்டின் முன்னேற்றத்தில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைவரும் ஒன்றாக ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தங்கள் பங்கை வகிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கருத்து பதிவிட்டிருந்தார்.
ரோஹித் சர்மாவின் இந்த கருத்துக்கு தாம் தூம், தலைவி என தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை கங்கனா ரனவத் காட்டமாக பதிலளித்திருந்தார்.
அதில், இந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஏன் டோபியின் அருகே நாய்களைப் போல குரைக்கிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட புரட்சிகர சட்டங்களை விவசாயிகளே ஏன் எதிர்க்கிறார்கள்? என்று பதிவிட்டிருந்த கங்கனா, மோதல்களுக்கு காரணமானவர்களை பயங்கரவாதிகள் என்று அவர் மீண்டும் விமர்சித்தார்.
கங்கனா பதிவிட்ட இந்த கருத்து சர்ச்சையனதால் சில நிமிடங்களில் டுவிட்டர் அதை நீக்கியுள்ளது.

