டோனி இன்னும் அவரை விளையாட வைக்காமல் இருப்பது ஏன்? 9 கோடி ரூபாய் வீரர் அவர்! ரசிகர்கள் புலம்பல்
சென்னை அணியின் கேப்டன் ஆன டோனி, அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஆல் ரவுண்டரை டோனி இன்னும் விளையாட வைக்காமல் இருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நான்காவது இடத்தை பிடிப்பதற்கு ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையில் இன்று முதல் இரண்டு இடங்களில் இருக்கும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.
சென்னை அணி தற்போது இருக்கும் பார்மில் அணியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது, அதே சமயம் சென்னை அணி கடந்த ஆண்டு ஏலத்தின் போது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிருஷ்ணாப்பா கவுதமை 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இதற்கு முன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர், அதில் இருந்து வெளியேறிய நிலையில், இவரை சென்னை அணி அதிக தொகை கொடுத்து எடுத்தது.
ஆனால், தற்போது வரை அவரை சென்னை அணி பயன்படுத்தவில்லை. அடுத்த ஆண்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளதால், இவரை இப்போது வரை டோனி பயன்படுத்தாமல் இருந்ததற்கு அவரை எடுக்காமல் இருந்திருந்தால் கூட, 9 கோடி ரூபாய் சென்னை அணிக்கு மிச்சம் என்று புலம்பி வருகின்றனர்.