தள்ளிப்போகும் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு
பாதுகாப்பு காரணங்களால் உயிரிழந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தள்ளிப்போகும் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு
அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவம் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை முறையான இறுதிச் சடங்கு செய்யாமல் ஈரான் அரசு இருந்து வருகிறது.

வெளியான தகவல்களின் படி, தலைவர் மறைவின் போது நடத்தப்படும் பிரம்மாண்ட இரங்கல் ஊர்வலத்தை நடத்த முடியாமல் தெஹ்ரான் அரசு மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
காமெனிக்கு முன்பாக 1989ம் ஆண்டு இருந்த தலைவரான ருஹொல்லா கொமேனி மறைந்த போது லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு படை தலைவர் அலி லாரிஜோனி போன்ற முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதால் ஈரான் தரப்பு சற்று பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஈரானிய அரசின் இந்த தயக்கம் தற்போதைய ஆட்சியின் பலவீனத்தை காட்டுவதாக ஜனநாயக பாதுகாப்பிற்கான அறக்கட்டளை மூத்த ஆய்வாளர் பெஹ்னாம் தலேப்லு கருத்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |