ஏர் இந்தியா விமான விபத்தால் அதிர்ஷ்டமாக மாறிய இருக்கை எண் 11ஏ.., ஆனால் ஐரோப்பாவில் வெறுக்கப்படுகிறது ஏன்?
அகமதாபாத் விமான விபத்தில் விபத்தால் அதிர்ஷ்டமாக மாறிய இருக்கை எண் 11ஏ, ஐரோப்பாவில் வெறுக்கப்படுகிறது.
என்ன காரணம்?
நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் இறப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். அதற்கு காரணம் அவர் அமர்ந்திருந்த 11ஏ இருக்கை தான்.
இந்த இருக்கையானது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்து ஜன்னலுக்கு அருகில் இருக்கும். இந்த இருக்கைக்கு இடைவெளி அதிகமாக இருக்கும்.
மேலும், அவசர கதவுக்கு அருகே இறக்கைக்கு பக்கத்தில் இருக்கும். இது விமானத்தின் பலமான பகுதியாக இருப்பதால் விபத்து நடைபெறும் போது இந்த இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் விரைவில் தப்புவதாக நம்புகிறார்கள்.
ஆனால், இந்த இருக்கையை ஐரோப்பிய விமானங்களில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. போயிங் 787-ஐப் போலவே ஐரோப்பியாவில் போயிங் 737 எனப்படும் விமான ரகங்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு 11ஏ இருக்கை சரியான இடத்தில் அமைந்திருக்காது. மேலும், இருக்கையை மடக்கி தூங்குவதற்கு போதுமான வசதி இருக்காது. இதனால் இந்த இருக்கையானது அங்கு வெறுக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |