இந்த பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை சாப்பிடக்கூடாதாம்! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்
உணவுக்கு நிறம் மற்றும் சுவை சேர்ப்பது முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவைகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது அனைத்திலும் மஞ்சளுக்கு முக்கிய இடம் உள்ளது.
மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (Riboflavin) (பி 2), வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
இருப்பினும் இந்த மசாலாவை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலை பல வழிகளில் பாதிக்கலாம்.
அந்தவகையில் இதனை யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது? என்ன ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
யார் எடுத்து கொள்ள கூடாது?
- அதிகப்படியான உட்கொள்ளல் ஆபத்தை ஏற்படுத்தும். அந்த அபாயங்களில் ஒன்று, உங்கள் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- மஞ்சளை அதிகமாக உட்கொள்வது இரத்தம் மெலிவதற்கு வழிவகுக்கும். ஏனெனில் இது இரத்த உறைதலைக் குறைக்க உதவுகிறது.
- மஞ்சளை அதிகமாக உட்கொள்வது கல்லீரலின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் சாப்பிட வேண்டும்?
மஞ்சள் தினசரி உட்கொள்ளல் 2000 மி.கிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் ஒருவர் குறைந்தது 500mg அளவு மஞ்சளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உட்கொள்ளலாக இருக்கும்.
மஞ்சளை யார் பயன்படுத்தக்கூடாது?
பித்தப்பை பிரச்சனைகள், இரத்தப்போக்கு கோளாறுகள், நீரிழிவு நோய், இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), கருவுறாமை, இரும்புச்சத்து குறைபாடு, கல்லீரல் நோய், ஹார்மோன்-சென்சிட்டிவ் நிலைகள் மற்றும் அரித்மியா போன்ற நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப் போகிறவர்கள் மஞ்சளைப் பயன்படுத்தக் கூடாது.