எங்களை விட்டுவிட்டு இந்தியாவை மட்டும் ஆம்பர் பட்டியலில் சேர்த்தது ஏன்?: பிரித்தானியாவுடன் மல்லுக்கட்டும் நாடு
எங்கள் நாட்டை சிவப்புப் பட்டியலில்வைத்துவிட்டு இந்தியாவை மட்டும் ஆம்பர் பட்டியலில் சேர்த்தது ஏன் என பிரித்தானியாவிடம் மல்லுக்கு நிற்கிறது பாகிஸ்தான்.
ஏப்ரல் மாத துவக்கத்தில் பாகிஸ்தான் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஏப்ரல் 19ஆம் திகதி இந்தியா பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது
ஆனால், ஆகத்து 5 முதல், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், இந்தியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்புப் பட்டியலிலிருந்து ஆம்பர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.
தங்கள் நாடு இன்னமும் சிவப்புப் பட்டியலில் இருக்க, இந்தியாவை ஆம்பர் பட்டியலுக்கு மாற்றியதால் எரிச்சலடைந்துள்ள பாகிஸ்தான், தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டது ஏன் என பிரித்தானியாவிடம் மல்லுக்கு நிற்கிறது.
பாகிஸ்தான் வம்சாவளியினரான, பிரித்தானிய சுகாதாரச் செயலர் Sajid Javidக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பாகிஸ்தான் சுகாதாரத்துறையைச் சேர்ந்த Faisal Sultan, இந்தியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் கொரோனா சூழலையும், பாகிஸ்தானின் கொரோனா சூழலையும் ஒப்பிட்டு, தங்கள் நாட்டில்தான் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், தடுப்பூசி போடுதல் அதிகமாக இருப்பதாகவும் கூறி, இருந்தும் தங்கள் நாட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.