அந்த நாட்டில் குடியேறுவது கனவு... ஒரே நாளில் புரட்டிப்போட்ட சம்பவம்: கைதான தாயார்
நியூசிலாந்துக்கு குடியேறுவதை கனவாக கருதிய மருத்துவர் தம்பதி, சொந்த பிள்ளைகளை கொலை செய்த வழக்கில் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
நியூசிலாந்தின் திமரு மாவட்ட நீதிமன்றத்திலேயே குறித்த கொலை வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 40 வயதான மருத்துவர் லாரன் டிக்கசன் தமது மூன்று மகள்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர் டிக்கசன், அவரது கணவரும் மருத்துவருமான கிரஹாம் மற்றும் அவர்களது மூன்று பெண் பிள்ளைகளுடன் கடந்த மாதமே நியூசிலாந்திற்கு வந்துள்ளார்கள். மட்டுமின்றி டிக்கசன் குடும்பம் ஒரு வாரம் மட்டுமே திமருவில் தங்கியிருந்துள்ளனர்.
ஆனால் சில நாட்களிலேயே வாழ்க்கையை மொத்தம் புரட்டிப்போடும் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்னாபிரிக்காவை சேர்ந்த இவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே நியூசிலாந்தின் திமரு மாவட்டத்தில் குடியேறியுள்ளனர்.
வியாழக்கிழமை சுமார் 10 மணியளவில் குடியிருப்புக்கு திரும்பிய மருத்துவர் கிரஹாம் கண்ட காட்சி அவரை மொத்தமாக உலுக்கியுள்ளது. இரட்டையர்கள் உட்பட தமது மூன்று பெண் பிள்ளைகளும் சடலமாக கிடப்பது கண்டு நொறுங்கிப் போயுள்ளார் மருத்துவர் கிரஹாம்.
மட்டுமின்றி தென்னாபிரிக்காவில் உள்ள குடும்பத்தினரும் இந்த துயரமான தகவல் கேட்டு கலங்கிப்போயுள்ளனர். இருப்பினும் டிக்கசன் ஏன் இந்த கொடுஞ்செயலை முன்னெடுத்தார் என்றே இன்னமும் விளங்கவில்லை என்கிறார்கள் உறவினர்களும் நண்பர்களும்.
பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னரே டிக்கசன் கர்ப்பமடைந்துள்ளார். இரட்டையர்களுடன் மூன்று பெண் பிள்ளைகளை அவர்கள் மிகுந்த அக்கறையுடனே கவனித்தும் வந்துள்ளனர்.
இருப்பினும் மருத்துவர் டிக்கசன் தமது மகள்களை கொல்லத் தூண்டியது எது என்பதில் அவரது கணவரும் உறவினர்களும் குழப்பத்திலேயே உள்ளனர்.