திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி

Indonesia
By Arbin Jun 24, 2022 03:22 AM GMT
Report
120 Shares

இந்தோனேசியாவில் திருமணம் முடித்து 10 மாதங்கள் குடும்பம் நடத்தியவர் உண்மையில் பெண் என்பதை அறிந்து உறைந்து போயுள்ளார் இளம் பெண் ஒருவர்.

குறித்த 22 வயது இளம் மனைவி தற்போது தமது முன்னாள் கணவர் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தோனேசியாவின் ஜம்பி நகரத்தை சேர்ந்த Ahnaf Arrafif என்பவரை டேட்டிங் செயலி ஊடாக குறித்த பெண் சந்தித்துள்ளார்.

தாம் ஒரு மருத்துவர் எனவும் நியூயார்க் நகரில் மருத்துவ படிப்பை முடித்துள்ளதாகவும் Ahnaf Arrafif தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார். மிக குறைந்த நாட்களிலேயே இருவரும் நேரிடையாக சந்தித்துகொண்டதுடன், ஒருவார காலம் குறித்த பெண்ணின் குடியிருப்பிலும் Ahnaf Arrafif தங்கிச் சென்றுள்ளார்.

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி | Wife Learns Husband Actually Woman

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தமது ஆசையை வெளிப்படுத்திய Ahnaf Arrafif-கு குறித்த பெண்ணின் பெற்றோரும் அனுமதியும் ஆசியும் வழங்கியுள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினருக்கு Ahnaf Arrafif நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமது சொந்த குடும்ப உறுப்பினர்கள் எவரையும் இது நாள் வரையில் மனைவியின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்யவும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், சிறப்பு அந்தஸ்து பெற்ற மருத்துவர் என கூறிவந்த Ahnaf Arrafif திருமணத்திற்கு பின்னர் மருத்துவமனைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் போது ஒருமுறை கூட ஆண்கள் போன்று நடந்துகொள்ளவும் இல்லை எனவும், குளிக்கும் போதும் உடை உடுத்தியிருந்ததும் தாயாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி | Wife Learns Husband Actually Woman

இந்த நிலையில், அந்த தாயார் தமது மகள் மீதான அக்கறையில் Ahnaf Arrafif இடம் ஆண் என்பதை நிரூபிக்க உடைகளை அகற்ற கோரியுள்ளார். இதில், உண்மை அம்பலமாகும் என்ற நிலையில் Ahnaf Arrafif நடந்தவற்றை வெளிப்படையாக கூறியுள்ளார்.

உண்மையில் தாம் ஒரு பெண் எனவும், Erayani என்பது தமது பெயர் எனவும், மருத்துவர் என பொய் கூறியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது இந்த வழக்கு ஜம்பி நகர நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆண் என பொய் கூறிய விவகாரத்தை விடவும், மருத்துவர் என கூறி ஏமாற்றியது குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US