திருமணமான 36 நாளிலே கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி
திருமணமான 36 நாளிலே கணவருக்கு மனைவி ஒருவர் உணவில் விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் செயல்
இந்திய மாநிலமான ஜார்கண்ட், கர்வா மாவட்டத்தில் திருமணமான 36 நாளிலே கணவருக்கு மனைவி ஒருவர் உணவில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.
இதில் இறந்து போன நபர் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்தநாத் சிங் என்பது தெரியவந்துள்ளது. இவரை கொலை செய்த அவரது மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது மகனை மருமகள் கொலை செய்ததாக புத்தநாத் சிங் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது தான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்த பெண் உறவினர்களிடம் புத்தநாத்தை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், ஒன்றாக வாழ முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், திருமணம் ஆன நாள் முதல் பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |