பற்றியெரியும் ஐரோப்பிய நாடு... கடும் அவதியில் மக்கள்: இன்னொரு தீவிலும் வெளியேறும் உத்தரவு
கிரேக்கத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பற்றியெரியும் காட்டுத்தீயில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு, ரோட்ஸ் தீவுக்கு அடுத்ததாக இன்னொரு பிரபல தீவில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Corfu தீவில் இருந்தும் மக்கள்
கிரேக்கத்தில் ரோட்ஸ் தீவில் இருந்து மக்கள் திரளாக வெளியேறிவரும் நிலையில், தற்போது Corfu தீவில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@dailystar
ரோட்ஸ் தீவை காட்டுத்தீ மொத்தமாக சூழ்ந்துள்ள நிலையில், பிரித்தானியர்கள் அதிகமாக தங்கியிருக்கும் Corfu தீவுப்பகுதியை காட்டுத்தீ நெருங்குவதாக கூறுகின்றனர்.
இதனையடுத்து கிரேக்கத்தின் அவசர தொடர்பு சேவைகள் பிரிவு, வெளியேறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூர் தகவல்களின் அடிப்படையில், Corfu தீவில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
அவசர எச்சரிக்கையாக Santa, Megoula, Porta, Palia Perithia மற்றும் Sinies பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி Kasiopi பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமான சேவைகள் ரத்து
உங்கள் பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளது, அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் படகுகளில் வெளியேறி வருகின்றனர்.
@dailystar
பிரித்தானிய விமான சேவை நிறுவனங்களான Jet2 மற்றும் TUI ஆகியவை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், 12 கிராமங்கள் மற்றும் பல ஹொட்டல்களில் இருந்து 16,000 பேர் சாலை வழியாகவும், 3,000 பேர் கடல் வழியாகவும் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |