சுற்றிவளைத்த காட்டுத்தீ... மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம்: சேவைகள் அனைத்தும் ரத்து
இத்தாலியின் பிரபல விமான நிலையம், காட்டுத்தீ சூழ்ந்துள்ளதன் காரணமாக மூடப்படுவதாக நிர்வாகிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலேர்மோ விமான நிலையம்
இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@epa
கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் உள்ளூர் நேரப்படி பகல் 11 மணி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து சேவைகள் தொடர்வதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.
சுமார் 100,000 பயணிகள் பாதிப்பு
இருப்பினும், பிரித்தானிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, Vincenzo Bellini விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 91 பகுதிகளுக்கு செல்லும் சுமார் 100,000 பயணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@epa
கடந்த ஞாயிறன்று விமான நிலையத்தின் டெர்மினல் ஏ பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 26 வரையில் மணிக்கு 4 விமானங்கள் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |