இளவரசர் ஹரியின் பிள்ளைகள் தொடர்பில் வருங்கால மன்னர் எடுக்கவிருக்கும் நடவடிக்கை
இளவரசர் வில்லியம் பிரித்தானியாவின் மன்னராகும்போது எடுக்கவிருக்கும் ஒரு நடவடிக்கை, இளவரசர் ஹரியின் பிள்ளைகளை பாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசர் வில்லியம் எடுக்கவிருக்கும் நடவடிக்கை
இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் 2020ஆண்டு, ராஜகுடும்ப பொறுப்புகளைத் துறந்தார்கள். பின்னர் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன், அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டார்கள்.
என்றாலும், அவர்கள் இன்னமும் His/Her Royal Highness என்னும் பட்டங்களை பயன்படுத்திவருகிறார்கள்.
மன்னர் சார்லஸ் அதை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், இளவரசர் வில்லியம் அந்த விடயத்தை அப்படியே விடமாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, முறைப்படி, ஹரி மேகன் குடும்பத்தின் மொத்த His/Her Royal Highness என்னும் பட்டங்களையும் நீக்கிவிடுவார் என்கிறார்கள் அவர்கள்.
ஆக, இளவரசர் வில்லியமுடைய இந்த நடவடிக்கையால், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகள் வருங்காலத்தில் His/Her Royal Highness என்னும் பட்டங்களை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |