எலிசபெத் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திய இளவரசர்கள் வில்லியமும் ஹரியும்: ஆனால்
பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கு ஒப்புரவாக ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அதை இருவரும் பயன்படுத்திக்கொண்டதுபோல் தெரியவில்லை.
ஆம், நேற்று அதாவது, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மூன்றாவது நினைவுநாள்.
அஞ்சலி செலுத்திய இளவரசர்கள் வில்லியமும் ஹரியும்
மகாராணியாருக்கு வில்லியமும் ஹரியும் அஞ்சலி செலுத்தினாலும், இருவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வகையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
இளவரசர் ஹரி தனது பாட்டியாரான மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவிடத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இளவரசர் வில்லியமோ, தன் மனைவியுடன் மகாராணியின் நினைவிடம் அமைந்துள்ள இடத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள Sunningdale என்னுமிடத்தில், தன் பாட்டியாரை சந்தித்த பெண்களை சந்தித்து உரையாடுவதன் மூலம் மகாராணியாருக்கு கௌரவம் செய்தார்.
ஆக, அருகருகே இருந்தும், வாய்ப்புக் கிடைத்தும் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை.
ஹரி, WellChild children’s charity awards என்னும் தொண்டு நிறுவனத்தில் விருதுகள் வழங்கும் விழாவுக்காக பிரித்தானியா வந்துள்ளார்.
ஹரி தன் தந்தையையும் சகோதாரர் வில்லியமையும் சந்திப்பாரா என்பதை அறிய ராஜகுடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ஹரியும் வில்லியமும் சந்திக்கும் வாய்ப்பு கைநழுவிப்போனதுபோல் தோன்றுகிறது.
என்றாலும், மன்னர் சார்லசாவது தன் மகனை சந்திப்பாரா என இன்னமும் ராஜகுடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |