பேசி தீர்க்கலாம்... இளவரசர் வில்லியம் முன்வைத்த ரகசிய சந்திப்பு: மொத்தமாக மறுத்த ஹரி
ராஜகுடும்பத்தில் இணைந்து செயல்படுவதில் அழுத்தங்கள் இருப்பதாக இளவரசர் ஹரி வெளிப்படை
ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்துகொள்ளவும் இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார்.
தங்களுக்கிடையேயான புகைச்சலை பேசித் தீர்க்கலாம் என இளவரசர் வில்லியம் முன்வைத்த ரகசிய சந்திப்புக்கு இளவரசர் ஹரி மொத்தமாக மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரண்மனையை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடியேறும் முன்னரே, தற்போதைய வேல்ஸ் இளவரசர் வில்லியம் குறித்த சந்திப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இளவரசர் ஹரி- மேகன் தம்பதி, தங்கள் நிலை குறித்து வெளிப்படையாக பேசியிருந்ததே காரணம் எனவும் கூறப்படுகிறது.
2019ல் நடந்த இந்த ஊடக நேர்காணலில், ராஜகுடும்பத்தில் இணைந்து செயல்படுவதில் அழுத்தங்கள் இருப்பதாக இளவரசர் ஹரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த வில்லியம் கடும் கோபமடைந்ததாகவும், இந்த விவகாரத்தை உடனடியாக பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்து, அதிகாரி ஒருவரிடம் ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்துகொள்ளவும் இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார்.
@getty
முதலில் இசைவு தெரிவித்த இளவரசர் ஹரி, தங்களின் ரகசிய சந்திப்பானது அரண்மனை பணியாளர்களால் அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாக பின்னர் மறுத்துள்ளார்.
இளவரசர் வில்லியத்திடம் நேரிடையாக பேசிய ஹரி, இந்த விவகாரம் தொடர்பில் யாரை தாம் தொடர்புகொள்ள வேண்டும் என வினவ, தமது தனிப்பட்ட செயலர் என வில்லியம் பதிலளிக்க, உடனையே, அந்த சந்திப்புக்கு வாய்ப்பில்லை என ஹரி மொத்தமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சகோதரர்களுக்கு இடையேயான மனக்கசப்பு பத்திரிகை விவாதாமாக மாறுவதை தாம் விரும்பவில்லை என்றே ஹரி அப்போது கூறியுள்ளார்.