அமெரிக்காவில் மூர்க்கமாக பெண்ணை பாய்ந்து தாக்கிய குரங்கு! துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்
அமெரிக்காவில் பெண்ணொருவரை தாக்கிய குரங்கு சுட்டுக் கொல்லப்பட்டது.
வளர்ப்பு குரங்கு
Oklahomaவின் டிக்கின்ஸனில் வாசிப்பவர் பிரிட்டனி பார்க்கர். இவரது அண்டை வீட்டில் வளர்க்கப்படும் குரங்கு ஒன்று, தனது தாழ்வாரத்தில் அமர்ந்து வீட்டிற்குள் நுழைய முயற்சிப்பதை பிரிட்டனி கண்டுள்ளார்.
குரங்கு ஆக்ரோஷமாக மாறி வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால், அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பொலிஸார் அங்கு வந்தபோது குரங்கு அமைதியாக தோன்றியுள்ளது. இதனால் பிரிட்டனி அதிகாரிகளை சந்திக்க தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
முரட்டுத்தனமான தாக்குதல்
அப்போது பாய்ந்து வந்த குரங்கு அவர் மீது ஏறி மோசமாக தாக்கியது. பிரிட்டனி முடியை பிடித்து இழுத்த அந்த குரங்கு, அவரது காதை கடித்துள்ளது. அதன் பின்னர் அது அங்கிருந்து ஓடிவிட்டது.
அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு பொலிஸார் விரைந்தனர். அங்கு பிரிட்டனியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் குரங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரிட்டனி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
செல்லப்பிராணி சட்டங்கள்
Oklahomaவில் செல்லப்பிராணிகளை வளர்க்க தடை செய்யும் விதிமுறைகள் எதுவும் இல்லை. அங்கு அவை வளர்ப்பு விலங்குகளாகவே கருதப்படுகின்றன.
இந்த சம்பவம் குறித்து பேசிய பிரிட்டனி, 'ஒவ்வொரு முறையும் நாம் வெளியில் அடியெடுத்து வைக்கும்போது ஏதாவது ஒன்று தாக்குமோ என்று கவலைப்பட முடியுமா? இந்த வகையான விலங்குகளை கூட வைத்திருக்க ஒருவித பயிற்சி மற்றும் சான்றிதழ் இருக்க வேண்டும் என்று சில வகையான சட்டங்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.