4 ஆண்டுகளாக சிம்பன்சி குரங்கை சந்தித்து வந்த பெண்! கவனித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பதில்
பெலிஜியத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் சிம்பன்சி குரங்கை காதலிப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
மனிதர்கள் விலங்கு பிரியர்களாக இருப்பது இயல்பு. ஆனால் ஒரு பெண் உண்மையிலேயே சிம்பன்சி குரங்கை காதலித்து வருகிறார்.
பெல்ஜியம் நாட்டில் Adie Timmermans எனும் பெண், Antwerp மிருகக்காட்சி சாலையில் இருக்கும் 38 வயது மிக்க ஒரு சிம்பன்சி குரங்கக்குடன் அதிக நேரத்தை செலவிடுவதை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
அந்தக் குரங்கும் அவருடன் அதிக நேரத்தை செலவழிப்பதை பார்த்த அவர்கள், ஏடியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
ஏடி கூறியதாவது, "நான் அந்த மிருகத்தை நேசிக்கிறேன், அவனும் என்னை நேசிக்கிறான். எங்களுக்கு ஒரு உறவு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
அவரை விசாரித்தபோது, Chita எனும் அந்த 38 வயது குரங்கை, அவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் வந்து பார்த்து, அதனுடன் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இருவருக்கும் இடையில் உண்மையிலேயே நெருக்கம் அதிகரித்துள்ளது.
நடுவே கண்ணாடி தடுப்புச் சுவர் இருந்தபோதிலும், இருவரும் சைகைகளையும், முத்தங்களையம் பரிமாறிக்கொள்வதுமாக இந்த உறவு மிகவும் உறுதியாக இருந்துள்ளது.
இந்த விவகாரம் சிட்டாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மிருகக்காட்சிசாலை நம்புகிறது, ஏனெனில் இது மற்ற சிம்பன்ஸிகளுடனான உறவை வளர்ப்பதில் தடையாக மாறி வருகிறது.
இதனால், வளர்ந்து வரும் உறவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் முடிவு செய்வதனர்.
இந்நிலையில், ஏடி டிம்மர்மேன்ஸ் இனி ஆண்ட்வெர்ப் மிருகக்காட்சிசாலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதனால் மிகவும் வேதனைக்கு உள்ளான ஏடி டிம்மர்மேன்ஸ், மிருகக்காட்சிசாலையின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்றும், மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஏன் என்னை அனுமதிக்கக்கூடாது?" என கேள்வி எழுப்பி வருகிறார்.