மின்னல் வேகத்தில் ரயில் வரும் போது தண்டவாளத்தைக் கடந்த பெண்: மயிரிழையில் உயிர் தப்பிய திகில் வீடியோ
நெதர்லாந்தில் மின்னல் வேகத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தை பெண் ஒருவர் இருமுறை கடக்கும் வீடியோ ஒன்று வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் ரயில் வந்துகொண்டிருக்கும்போது தண்டவாளத்தை ஓடிச் சென்று கடப்பதைக் காணலாம். அப்பா, ஒரு வழியாக அந்த பெண் தண்டவாளத்தைக் கடந்துவிட்டார் என பெருமூச்சு விடுவதற்குள், மறுபடியும் அந்த பெண் அதே தண்டவாளத்தைக் கடந்து வெளியே ஓடிவருகிறார்.
ஒரு விநாடி நேரத்திற்குள் மட்டுமே அவர் அந்த ரயிலைக் கடந்து வருவதைப் பார்க்கும்போது, நமக்கு திக்கென்றாகிவிடுகிறது.
அந்த ரயிலின் சாரதி நினைத்தாலும், அந்த ரயில் வந்த வேகத்துக்கு ரயிலை நிறுத்தியிருக்கமுடியாது.
திகிலை ஏற்படுத்தும் அந்த வீடியோவுடன் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, நெதர்லாந்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஆண்டொன்றிற்கு 160 முறை வரை நடக்கின்றனவாம்.
ஆக, அந்த பெண் வேண்டுமென்றே அப்படி செய்தாரா, அல்லது எதற்காக அப்படி செய்தார் என்று தெரியவில்லை. காரணம், ரயில் வருவதைப் பார்த்தும் ரயில் தண்டவாளத்தைக் கடந்து மறுபக்கம் சென்ற அந்த பெண், மின்னல் வேகத்தில் ரயில் வரும்போது மீண்டும் தண்டவாளத்துக்கு இந்தப் பக்கம் ஓடிவருவதை அந்த வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோவைப் பார்க்கும் நமக்குத்தான் திக்கென்றாகிறது. அந்த ரயிலை ஒட்டிய சாரதிக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்!
[0MTVNH ]