சிறை தண்டனையைத் தவிர்க்க 10 ஆண்டுகளாக ஒரு பெண் செய்துவந்த நம்பமுடியாத காரியம்! தலை சுற்றவைக்கும் சம்பவம்
சீனாவில் ஒரு பெண் அடுத்தடுத்து கர்ப்பமாகி 5 குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் 10 ஆண்டுகளாக சிறை தண்டனையை தவிர்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த அடையாளம் வெளியிடப்பாடாத ஒரு பெண், 2011-ஆம் ஆண்டில் திருட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஆனால் அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார்.
இப்படி ஒரு விலக்கு இருப்பதை பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும் போதும் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்துவந்துள்ளார்.
இதன் விளைவாக, கடந்த தசாப்தத்தில் அதிகமான குற்றங்களைச் செய்த போதிலும், அவர் சிறை தண்டனையை தவிர்த்து, அதற்கு பதிலாக வீட்டில் சமூகத் திருத்தத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டார்.
ஆனால், இந்த முறை சரியான நேரத்தில் கர்ப்பம் தரிக்கத் தவறியதால், வீட்டிலிருந்து தப்பி ஓடிய அவரை, உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இறுதியாக அவரை சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.
அவர் கடந்த மார்ச் மாதம் தப்பி ஓடியதையடுத்து, ஏப்ரல் 7-ஆம் திகதி அருகிலுள்ள லியான்யுங்காங் நகரில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண், “நான் இப்போது மிகவும் வருந்துகிறேன். நான் அந்த சட்டவிரோத செயல்களைச் செய்திருக்கக்கூடாது, பல குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடாது. இது மிகவும் பொறுப்பற்றது" என்று அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த தசாப்தத்தில் இன்னும் பல முறை குறிப்பிடப்படாத குற்றங்களுக்கு தண்டனை பெற்ற அவர், இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாம். அங்குள்ள சட்டத்தின்படி நர்சிங் காலம் 12 மாதங்கள் ஆகும்.