கணவருக்கு மறதிநோய் இருப்பதாக அவரை நம்பவைத்து கோடிக்கணக்கான பணத்தை திருடிய மனைவி! மண்டை காயவைக்கும் பின்னணி
அமெரிக்காவில் கணவருக்கு அல்சைமர் வியாதி இருப்பதாக அவரை பொய்யாக நம்ப வைத்து கோடிக்கணக்கிலான அவரின் பணத்தை திருடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
East Haven-ஐ சேர்ந்தவர் மரினோ. இவர் கடந்த 20 ஆண்டுகளாக கணவரின் பணத்தை மோசடி செய்து வந்திருக்கிறார். அதன்படி கணவரின் வங்கி கணக்கை தனது முழு கட்டுபாட்டில் வைத்தபடி அவரின் கையெழுத்தை போட்டு 20 ஆண்டுகளில் $600,000 (கிட்டத்தட்ட ரூ 12 கோடிகள்) அளவில் மோசடி செய்திருக்கிறார்.
இதை சமீபத்தில் தான் மரினோவின் கணவர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து பொலிசார் மரினோவை கைது செய்தனர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நம்பமுடியாத திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன்படி, கணவருக்கு அல்சைமர் (மறதிநோய்) இருப்பதாக நம்ப வைத்திருக்கிறார் மரினோ. இதை வைத்து அவர் வங்கிக்கு செல்வதை தடுத்து நிறுத்தி கணக்கில் பணம் குறைந்துள்ளதை தெரியாமல் பார்த்து கொண்டிருக்கிறார்.
இதோடு கணவரின் சில உடைமைகள், நகைகள் மற்றும் அரிய நாணயங்கள் உட்பட, அவரின் பொருட்களை அடகு வைத்தும் பணத்தை பெற்று சொகுசாக செலவு செய்திருக்கிறார் மரினோ.
அவர் மீது முதல் நிலை திருட்டு மற்றும் மூன்றாம் நிலை மோசடி தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.