கொள்ளை முயற்சியால் தவறி விழுந்து பெண் மரணம்! ஓர் ஆண்டில் 100 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி அறிக்கை
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, பெண்ணொருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள்
கராச்சி நகரின் பல்டியா டவுன் அருகே தம்பதி தங்கள் மகனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.
அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் திடீரென அவர்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது.
Getty Images/iStock
இதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவனும், மகனும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
100க்கும் மேற்பட்டோர் மரணம்
தனது மனைவியின் பணப்பையை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகவும், இதனால் தனது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். நடப்பு ஆண்டில் மட்டும் கராச்சி நகரில் நடந்த கொள்ளை முயற்சிகளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |