திருமணத்திற்கு வரன் பார்த்த பெற்றோர்: இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..அறையில் கிடந்த ஊசிகள்
தமிழக மாவட்டம் தர்மபுரியில் இளம் பெண் மருத்துவர், தனக்கு தானே மயக்க ஊசிகளை செலுத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளம் பெண் மருத்துவர்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மோனிகா (27).
ஹரிஹரநாத சாமி கோவில் தெருவை சேர்ந்த இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படித்த முடித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற மோனிகா அவரது அறையில் இருந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாக அவரது அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரின் அறைக்கதவை தட்டியுள்ளனர். அப்போது உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அங்கு மோனிகா உடலில் அசைவின்றி கிடந்துள்ளார்.
அவரை பரிசோதித்தபோது மோனிகா இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
திருமணம் செய்து வைக்க
இதற்கிடையில் பொலிஸார் நடத்திய விசாரணையில், மோனிகாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால், அவருக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், மோனிகாவின் அறையில் மயக்க மருந்து போத்தல்களும், ஊசிகளும் கைப்பற்றப்பட்டன.
இதன் காரணமாக, அவர் தனக்குத் தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்திக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |