நீருக்கடியில் பயணித்த பெண்ணுக்கு அதிர்ச்சி! பகிர்ந்த திகில் அனுபவம்
அமெரிக்காவில் பெண்ணொருவர் 9 அடி முதலையால் தாக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
Snorkeling
புளோரிடாவைச் சேர்ந்த மரிசா கர் என்ற பெண் தனது நண்பர் ஷேனுடன் Snorkeling (நீருக்கடியில் பயணிப்பது) செய்துகொண்டிருந்தார்.
அப்போது மரிசா நீந்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த 9 அடி முதலை ஒன்று தாக்கியுள்ளது. இதனால் மரிசாவின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
எனினும் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். குறித்த முதலை பொறி வைத்து பிடிக்கப்பட்டு நீரில் இருந்து அகற்றப்பட்டது.
திகில் அனுபவம்
உயிர்தப்பிய அனுபவம் குறித்து மரிசா கூறுகையில், 'நான் முகமூடியைக் கிழித்தேன். திரும்பிப் பார்த்தேன். அப்போது இரண்டு சிறிய கண்கள் தண்ணீருக்கு வெளியே ஒட்டிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் அது மோசமாக வலிக்கவில்லை.
பிறகு, நான் திரும்பி ஓடுவது போல் , அது என்னவென்று பார்த்தேன். அது வலிக்க ஆரம்பித்தது. என் நெற்றி மிகவும் வலிக்கிறது, என் கழுத்தில் அவ்வளவு வலி இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த முழு சம்பவமும் சில நொடிகளில் கடந்ததாகவும், என்ன நடந்தது என்பதை உணரவே இல்லை என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |