காபூலை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு நடுவானில் நடந்த திகில் சம்பவம்! சுவாரசியமான தகவல்
காபூலை விட்டு வெளியேறிய ஆப்கான் பெண்ணுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் எதிர்பாராதவிதமாக பிரசவம் நடந்துள்ளது.
தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக ஆப்கான் மக்களை காபூலில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்திற்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க போவதில்லை என்று தாலிபான்கள் அறிவித்ததை தொடர்ந்து விமான நிலையத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரீச் 828 என்ற எண் கொண்ட அமெரிக்க சி-17 ரக ராணுவ விமானத்தில் வெளியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
Medical support personnel from the 86th Medical Group help an Afghan mother and family off a U.S. Air Force C-17, call sign Reach 828, moments after she delivered a child aboard the aircraft upon landing at Ramstein Air Base, Germany, Aug. 21. (cont..) pic.twitter.com/wqR9dFlW1o
— Air Mobility Command (@AirMobilityCmd) August 21, 2021
இதையடுத்து அந்த விமானம் உடனடியாக ஜெர்மனியில் உள்ள ராணுவ விமானதளத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மருத்துவ குழு அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
இதையடுத்து அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைக்குழந்தைக்கு உதவிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் நடைபெற்ற பிரசவம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.