பிரித்தானிய இளவரசி டயானா ஒரு வீட்டில் வேலை பார்த்த இரகசியம் தெரியுமா உங்களுக்கு?: இதுவரை வெளிவராத ஒரு தகவல்...
பிரித்தானிய இளவரசி டயானா தனக்கு 18 வயது இருக்கும்போது, ஒரு வீட்டில் குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்ளும் வேலையை செய்துள்ளார் என்ற தகவல் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
1980ஆம் ஆண்டு, அமெரிக்க தொழிலதிபரான மேரி ராபர்ட்சன் என்ற பெண் லண்டனில் வசித்த காலகட்டத்தில், தனது குழந்தை பாட்ரிக்கை கவனித்துக்கொள்வதற்காக 18 வயதான டயானா என்ற பெண்ணை வேலைக்கமர்த்தியுள்ளார்.
அந்த வேலைக்காக டயானா பெற்ற ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 5 டொலர்கள். வாரத்தில் மூன்று நாட்கள் அந்த குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலையைப் பார்த்த டயானா, மீதமுள்ள நாட்களில் நர்சரி பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் வேலை பார்த்துள்ளார்.
ஆனால், அந்த டயானா பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்பதோ, அவர் இளவரசர் சார்லசை காதலிக்கிறார் எனபதோ அப்போது மேரிக்கு தெரியாதாம்.
ஒரு நாள் டயானா மேரியிடம், நீங்கள் காலையில் வேலைக்கு செல்லும்போது, நம் தெரு முனையில் சிலர் நின்றார்கள் பார்த்தீர்களா, அவர்கள் பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் என்றாராம். அதற்கு மேரி, அவர்கள் யாருக்காக அங்கு நிற்கிறார்கள் என்று கேட்க, எனக்ககத்தான் என்றாராம் டயானா.
18 வயதில், உலகம் தெரியாத நாணமுள்ள ஒரு இளம்பெண்ணாக வேலைக்கு வந்தார் டயானா. என் பிள்ளையோடு அவர் எளிமையாக தரையில் உட்கார்ந்து அவனை நன்றாக கவனித்துக்கொள்வார். அப்போதே தன் சக மனிதர்களை கரிசனையுடன் அணைத்துக்கொள்ளும் ஒரு பண்பு அவருக்கு இருந்தது, அந்த குணம் அவருக்கு கடைசி வரை இருந்தது என்கிறார் மேரி.
பிறகு, டயானா திருமணமாகி அரண்மனைக்கு சென்ற பிறகும், அவர் இறக்கும் வரை, 16 ஆண்டுகளுக்கு தங்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்தது என்கிறார் மேரி.