லண்டனில் 60 வயது பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற நபர்..பரபரப்பான வீதியில் அரங்கேறிய சம்பவம்
பிரித்தானியாவில் நபர் ஒருவர் 60 வயது பெண்ணை கத்தியால் குத்திக்கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
பரபரப்பு சம்பவம்
வடமேற்கு லண்டனில் Burnt Oak Broadwayயில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 60 வயதுமிக்க பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
பரபரப்பான வீதியில் பகல்வேளையில் அரங்கேறிய இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு Air ஆம்புலன்ஸ், துணை மருத்துவ பணியாளர்கள் விரைந்தனர்.
ஆனால், தாக்குதலுக்கு ஆளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல்தாரியான 22 வயது இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, அவரை காவலில் வைத்திருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் தாக்குதல்
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது அடையாளம் மற்றும் அவரது உறவினருக்கு தெரிவிக்க விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் டோனி பெல்லிஸ் கூறுகையில், ''இது இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் சிறப்பு துப்பறியும் நபர்களின் விரைவான வேலையின் விளைவாக வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
மேலும் இந்த சம்பவம் ஏன் நடந்தது? இறந்த பெண்ணுக்கு குறித்த தெரிந்தவரா என்பதை நிறுவ நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலால் ஒரு குடும்பம் பேரழிவுக்கு ஆளாகியுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |