காதலன் மீது மொபைல் போனை தூக்கி எறிந்த இளம்பெண்... கொலை குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு செல்லும் பரிதாபம்
அர்ஜெண்டினாவில் இளம்பெண் ஒருவர் காதலன் மீது மொபைல் போனை தூக்கி எறிந்ததால் அந்த காதலன் பலியானார்.
அர்ஜெண்டினாவில் தன் காதலன் தன்னைத் தாக்கியதால் Roxana Adelina Lopez (22) என்ற இளம்பெண் அவர் மீது மொபைல் போனைத் தூக்கி வீசியுள்ளார்.
அந்த மொபைல் போன், Luis Dario Guantay என்னும் அந்த காதலனின் நெற்றிப்பொட்டில் தாக்கியுள்ளது. தலைவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளார்.
Luisஇன் தாயார் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் Roxana.
Roxana மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பச் சண்டையில், காதலன் மீது மொபைலை வீசி எறிந்ததால் ஒரு பெண் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.