பாரீஸில் இருந்து கிளம்பிய விமானத்தில் பயணம் செய்த பெண் மாரடைப்பால் மரணம்!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து பாகிஸ்தான் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த நிலையில் நடுவானில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தான் சர்வதேச விமானமானது பாரீஸில் இருந்து கிளம்பியது.
வானத்தில் விமானம் பறந்த போது உள்ளிருந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முதலுதவி செய்யப்பட்டது, பின்னர் விமானமானது அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பயணி உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்பிறகு விமானமானது புறப்பட்டு சென்றது. இது ஒரு எதிர்பாராத சோக சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.