கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பெண்: கடும் தண்டனை
முதல் முறையாக விமானத்தில் பயணித்த ஒரு பெண், கழிவறை என நினைத்து விமானத்தில் கதவைத் திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தின் கதவைத் திறந்த பெண்
கடந்த வாரம், Air China நிறுவன விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்த நிலையில், பெண்ணொருவர் விமானத்தில் அவசர வழிக் கதவைத் திறந்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த விமானத்திலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

கடும் தண்டனைகள்
அந்தப் பெண்ணிடம் ஏன் அந்தக் கதவைத் திறந்தீர்கள் என்று கேட்டபோது, முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் அவர், கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்தது தெரியவந்தது.
ஆனால், அவருக்கு சுமார் 22,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என தெரியவந்ததையடுத்து, கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார் அந்தப் பெண்.

மேலும், அவர் நீதிமன்ற விசாரணை ஏதுமின்று காவலில் அடைக்கப்படலாம் என்பதுடன், இனி விமானத்தில் பயணிக்க அவருக்கு தடையும் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் அவர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |