கணவன், 3 குழந்தைகளுக்கு ஜுஸில் விஷம் கலந்து கொடுத்த மனைவி! வெளிநாட்டில் நடந்த பயங்கரம்
எகிப்தில், மனைவி தன்னுடைய கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு குடிக்கும் ஜுஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் Qena பகுதியில், வசித்து வரும் 26 வயது பெண் ஒருவர் தன்னுடைய கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு ஜுஸில் விஷம் வைத்து கலந்து கொடுத்துவிட்டு, பொலிசில் காலவதியான ஜுஸை குடித்ததன் காரணமாக குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், எகிப்தின் தெற்கு கவர்னர் Qena-வில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய முறையற்ற உறவை கொண்டுள்ளார்.
இதற்கு கணவன் மற்றும் குழந்தைகள் தடையாக இருப்பதால், அவர்களை தன்னுடைய காதல் உதவியுடன் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி சம்பவ தினத்தன்று அந்த பெண்ணின் காதலர் ஜுஸில் விஷத்தை செலுத்திக் கொடுக்க, அதை கொண்டு வந்த அவர் அப்படியே தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
இதைக் குடித்த குழந்தைகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் கணவர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கபப்ட்டதால், பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, முதலில் கணவர் மற்றும் குழந்தைகள் காலாவதியான ஜுஸை குடித்துவிட்டனர் என்று காரணம் கூறியுள்ளார்.
ஆனால், பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.