இறந்து 45 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் உயிர் பெற்ற அதிசிய பெண்! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
அமெரிக்காவில் பெண் ஒருவர் இறந்து 45 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நகரில் உள்ள மேரிலாந்தை சேர்ந்தவர் கேத்தி. இவரது மகள் ஸ்டேசி ஃபைபர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கேத்தி உடனடியாக அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனையடுத்து 45 நிமிடங்களுக்கு மூளை, இதயத்துடிப்பு போன்ற எதுவும் செயல்படவில்லை என்பதால் கேத்தி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அதே நேரத்தில் கேத்தியின் மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட கேத்தி மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். கேத்தி உயிர்பெற்ற சில நேரத்திலே ஸ்டேசி குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த நிகழ்விற்கு பிறகு கேத்தி கூறியதாவது, எனக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். என்னால் முடிந்த அளவிற்கு சிறந்த நபராக இருக்க முயற்சி செய்வதாக உணர்ச்சி பொங்க கூறி இருந்தார்.
மேலும் கேத்திக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இந்த அற்புத நிகழ்வை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். பாட்டி, தாய் மற்றும் குழந்தை மூவரும் மருத்துவமனையில் நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.