பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை: பதறவைக்கும் ஒரு செய்தி
பிரித்தானியாவில், பக்கவாதம் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் பக்கவாதம் காரணமாக உயிரிழக்கவில்லை, யாரோ ஒருவர் அவரை கொடூரமாக வன்புணர்ந்ததால் கொல்லப்பட்டார் என்ற செய்தி தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி
இங்கிலாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த Valerie Kneale (75)க்கு திடீரென பக்கவாதம் தாக்கியதால், அவர் Blackpool Victoria Hospital என்னும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உடனடி சிகிச்சை நல்ல பலன் கொடுக்கவே, உறவினர்கள் கூட உடனிருக்கத் தேவையில்லை, அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று மருத்துவமனை கூறியதால் Valerieஇன் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
Image: BBC
மீண்டும் பக்கவாத பாதிப்பு
ஆனால், அன்று மாலையே மீண்டும் ஒருமுறை Valerieயை பக்கவாதம் தாக்க, அதற்குப் பிறகு சுயநினைவு திரும்பாமலே நான்கு நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்துவிட்டார். ஒரு தாயை, பாட்டியை, மனைவியை இழந்து குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்திருந்தபோதுதான் இடிபோன்றதொரு செய்தி அவர்களைத் தாக்கியது.
Image: BBC
வன்புணரப்பட்டதால் மரணம்
உயிரிழந்த Valerieக்கு மருத்துவமனை நோயியல் சிறப்பு நிபுணர் வழக்கமான உடற்கூறு ஆய்வு செய்ய, அப்போதுதான் அந்த பயங்கர உண்மை தெரியவந்துள்ளது.
அது என்னவென்றால், Valerie பக்கவாதத்தால் உயிரிழக்கவில்லை. யாரோ ஒருவர் அவரை பயங்கரமாக வன்புணர்ந்துள்ளார். கொடூரமாக வன்புணரப்பட்டதால் உள்ளுறுப்புகள் கடுமையாக சிதைந்து Valerie உயிரிழந்துள்ளார் என்பது தெரியவரவே, உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அந்த மருத்துவர்.
Image: Liverpool Echo
துப்புக்கொடுத்தால் பரிசு
இதற்கிடையில், ஏராளமானோரை விசாரித்தும் குற்றவாளி சிக்கவில்லை. அந்த நபர் மேலும் யாரையாவது தாக்கலாம் என்ற அச்சம் உள்ளதால் பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். அவரைக் குறித்து பயனுள்ள துப்பு கொடுப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Valerie பாதுகாப்பாக மருத்துவமனையில் இருக்கிறார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கொண்டிருக்க, சத்தமிடவோ, எதிர்த்துப் போராடவோ முடியாத பரிதாப நிலையில் இருந்தபோது, மருத்துவமனையிலேயே அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தியை ஜீரணிக்க இயலாமல் அவரது குடும்பத்தினர் அங்கலாய்த்து வருகிறார்கள்.