பெண்ணின் வயிற்றுக்குள் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்து அரண்டுபோன மருத்துவர்கள்! உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள்
மருத்துவரிடம் வந்த வயதான பெண்ணின் குடலுக்குள் 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் இருந்தன.
ஐரிஷ் மெடிக்கல் ஜர்னலின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அயர்லாந்தின் செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு 66 வயதான ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 55 ஏஏ மற்றும் ஏஏஏ பேட்டரிகளை அகற்றியது.
அயர்லாந்தின் டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளியின் வருகையை விவரிக்கும் ஐரிஷ் மெடிக்கல் ஜர்னல் (Irish Medical Journal) கடந்த வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
66 வயதான அப்பெண் மருத்துவமனைக்கு வந்தவுடன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டது, அதில் அவரது உடலில் உள்ள வெளிநாட்டு பொருட்கள் தெரியவந்தது. ஆனால், பேட்டரிகள் எதுவும் அவளது இரைப்பைக் குழாயைத் தடுக்கவில்லை, எந்த பேட்டரியும் கட்டமைப்பு சேதத்தின் அறிகுறிகளைக் காட்டவில்லை. இதைக் கண்டு மருத்துவர்கள் முதலில் நிம்மதியடைந்தனர்.
அந்த பெண்ணின் உடலில் இருந்து பேட்டரிகள் இயற்கையாகவே (மலம் கழிக்கும்போது) வெளியேறும் வரை காத்திருக்க மருத்துவர்கள் முதலில் முடிவு செய்தனர். ஒரு வார காலப்பகுதியில், நோயாளி 5 AA சைஸ் பேட்டரிகள் வெளியே வந்தன. ஆனால், அடுத்தடுத்த எக்ஸ்-ரேக்களில் பெரும்பாலானவை இன்னும் உள்ளே சிக்கியிருப்பதைக் காட்டியது.
பின்னர் அவருக்கு வயிற்று வலி அதிகமானத்தைத் தொடர்ந்து, உள்ளே சிக்கியிருந்த மீதமுள்ள பேட்டரிகளின் எடையின் காரணமாக, அந்த பெண்ணின் வயிறு அவளது அந்தரங்க எலும்பின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர்.
கண்டுபிடிப்புக்குப் பிறகு, அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழு அவளது வயிற்றில் ஒரு சிறிய துளையிட்டு, அதில் இருந்து 46 கூடுதல் பேட்டரிககளை வெளியே எடுத்தனர்.
ஆனால், அறுவை சிகிச்சை செய்த போதிலும், நான்கு பேட்டரிகள் பெருங்குடலில் சிக்கியிருந்தன. பின்னர் மருத்துவர்கள் போராடி, நோயாளியின் மலக்குடலில் இருந்து பேட்டரிகளை ஆசனவாய் வழியாக தள்ளி வெளியே எடுத்துள்ளனர்.
இறுதியில், அவர் உட்கொண்ட மொத்த பேட்டரிகளின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்தது.
இந்த சம்பவம் ஆர்வமூட்டும் குழப்பத்தை ஏற்படுத்திய போதிலும், பேட்டரிகளை உட்கொள்வது தன்னைத்தானே காயப்படுத்தும் ஒரு தீவிரமான முறையாகக் கருதப்படுகிறது. இதனால் "மியூகோசல் காயம், துளைத்தல் மற்றும் அடைப்பு" உள்ளிட்ட கடுமையான மருத்துவ சிக்கல்கள் ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Photos: Irish Examine