விமான நிலையத்தில் குடித்துவிட்டு இளம் பெண் செய்த மோசமான செயலால் அவருக்கு நேர்ந்த நிலை! வைரலாகும் புகைப்படங்கள்
ரஷ்யாவில் இளம் பெண் விமான நிலயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் அதிக் அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் Sheremetyevo Alexander S. Pushkin சர்வதேச விமானநிலையத்திற்கு பெண் ஒருவர் தன்னுடைய நண்பரின் திருமணத்திற்கு செல்வதாக அங்கு விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.
குடிபோதையில் இருந்த அவர் பின் திடீரென்று அவர், அங்கிருந்த ஊழியர்களை அவமதிததுடன், பயணி ஒருவரிடமும் தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண், Sheremetyevo Alexander S. Pushkin குடிபோதையில் தகராறி ஈடுபட்டார்.
இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தகாத முறையில் பேசியதுடன், அவதூறாக நடந்து கொண்டுள்ளார்.
அதன் பின் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். ஆனால், அந்த பெண் இந்தளவிற்கு கோபமடைந்து தகராறில் ஈடுபட்டார் என்பது தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும், குடித்துவிட்டு விமானநிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.