ஜெயிலுக்கு செல்வதற்காக வேண்டுமென்றே குற்றம் செய்யும் 81 வயது மூதாட்டி.., பின்னணியில் இருக்கும் காரணம்

Japan
By Sathya Feb 04, 2025 10:30 AM GMT
Report

81 வயது மூதாட்டி ஒருவர் சிறையில் தங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.

பின்னணி என்ன?

ஜப்பானில் அகியோ என்ற 81 வயதான மூதாட்டி, சிறையில் தங்க வேண்டும் என்பதற்க்காக வேண்டுமென்றே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். இது நாட்டின் வளர்ந்து வரும் வயதான மக்கள்தொகை நெருக்கடியை சுட்டி காட்டுகிறது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையின்படி, உணவைத் திருடியதற்காக அவர் முதலில் தனது 60 வயதில் சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் அவரது ஓய்வூதியத்தில் உயிர்வாழ்வது கடினமாக இருந்தபோது மீண்டும் குற்றத்தை செய்தார்.

ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

டோக்கியோவிற்கு வடக்கே அமைந்துள்ள ஜப்பானின் மிகப்பெரிய பெண்கள் சிறையான தோச்சிகி பெண்கள் சிறைக்கு அகியோ அனுப்பப்பட்டார். இந்த சிறையில் கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். இது ஒரு சிறிய பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துதான் கடைகளில் திருடியதாக ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் நிதி நெருக்கடியால் வேறு வழியில்லாமல் திருடியுள்ளார்.

நிதி ரீதியாக நிலையான மற்றும் வசதியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்திருந்தால் நிச்சயமாக அதைச் செய்திருக்க மாட்டேன் என்று அகியோ கூறுகிறார்.

ஜெயிலுக்கு செல்வதற்காக வேண்டுமென்றே குற்றம் செய்யும் 81 வயது மூதாட்டி.., பின்னணியில் இருக்கும் காரணம் | Woman Who Deliberately Commits Crime To Go To Jail

மேலும் அவர், "வெளியில் தனியாக இருப்பதை விட அங்குள்ள வாழ்க்கை நிலையானதாக உள்ளது. இந்தச் சிறையில் மிகவும் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிலையானதாக இருக்கலாம்" என்று கூறினார்.

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, அகியோ தனது 43 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், அவர் அகியோவை அடிக்கடி வெளியேறும்படி கூறியுள்ளார்.

பின்னர், ஒக்டோபர் 2024 -ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், மகனுடன் இருப்பதற்கு பயத்துடனும், அவமானத்துடனும் இருந்துள்ளார்.

சிறை அதிகாரி தகயோஷி ஷிரனகா கூறுகையில், "பல வயதான கைதிகள் வெளியில் கைவிடப்படுவதை விட சிறை வாழ்க்கையை விரும்புகிறார்கள்" என்றார்.

உலகில் மிக வேகமாக வயதான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும். அரசாங்க தரவுகளின்படி, 2024 இல் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் முதியோர்கள் இப்போது 29.3% ஆக உள்ளனர். அதிகரித்து வரும் ஆயுட்காலம் மற்றும் பிறப்பு விகிதம் குறைவதால், ஜப்பான் தனது வயதான குடிமக்களைப் பராமரிப்பதில் சவால்களை எதிர்கொள்கிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US