நடுவிமானத்தில் பிரசவ வலி வந்ததாக கூறிய பெண்: விமானத்தை தரையிறக்கிய அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
பெண் ஒருவர் நடுவானில் தனக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து விமானம் அவரசரமான தரையிறக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின் நடந்ததை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
விமானத்தில் பிரசவ வலி வந்ததாகக் கூறிய பெண்
நேற்று, மொராக்கோ நாட்டிலிருந்து துருக்கி நோக்கி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
விமானம் ஸ்பெயின் பகுதியில் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென பெண் ஒருவர் தனக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக கூறவே, விமானம் உடனடியாக பார்சிலோனா நகரிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அடுத்து நடந்த எதிர்பாராத அதிர்ச்சியளிக்கும் சம்பவம்
விமானம் தரையிறங்கியதும், விமானத்திலிருந்த 28 பேர் விமானத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார்கள்.
பொலிசார் அவர்களைத் துரத்த, 14 பேர் மட்டுமே பொலிசாரிடம் சிக்கினார்கள். மற்ற 14 பேர் தப்பியோடிவிட்டார்கள்.
இந்நிலையில், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என்றும், ஆனால், அவருக்கு பிரசவ நேரம் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். அதாவது, அந்தப் பெண் தனக்கு பிரசவ வலி வந்ததுபோல நடித்துள்ளார்.
File pic: Shutterstock
ஆக, அந்த 28 பேர் தப்புவதற்காக இந்த பெண் போலியாக தனக்கு பிரசவ வலி வந்ததாக நடித்ததாக கருதப்படுகிறது.
ஸ்பெயின் அதிகாரிகளிடம் சிக்கியவர்களில் 5 பேர் அதே விமானத்தில் தொடர்ந்து பயணிக்க சம்மதித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பட்டுள்ளார்கள். அந்த கர்ப்பிணிப் பெண்ணும் மற்றவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்.
அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.