ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி - அரிய நோயால் அவதிப்படும் இளம்பெண்
பெண் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி எடுக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சாப்பிட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளாதது, அல்லது பயணங்களின் போது சிலருக்கு வாந்தி(Vomit) வருவது வழக்கம்.
ஆனால், இளம்பெண் ஒருவர், ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி எடுக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி
அமெரிக்காவை சேர்ந்த 29 வயதான Sharisse Zeroonian என்ற பெண், பதட்டம், மன அழுத்தம், அல்லது மாதவிடாய் வருவதை உணரும்போது, ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வரை வாந்தி எடுத்துள்ளார்.
இது சில நாட்களுக்கு தொடரும். அதன் பின்னர் நன்றாக இருப்பார். மீண்டும் சில வாரத்தில் இந்த பிரச்சினை தொடங்கும்.
2021 ஆம் ஆண்டு முதல் அவருக்கு இந்த பிரச்சினை இருந்துள்ளது. எண்டோஸ்கோபி, இரைப்பை காலியாக்கும் ஆய்வு, நிறைய இரத்த பரிசோதனை உட்பட பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
இருந்தும் அவருக்கு என்ன பிரச்சினை என்பதை மருத்துவர்களால் துல்லியமாக கண்டறியமுடியவில்லை. அவருக்கு இந்த வாந்தி பிரச்சினை இருந்துள்ளது.
இதன் காரணமாக 16 பவுண்டுகள் எடை குறைந்துள்ளார். மேலும், வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலே இருந்துள்ளார்.
சில சமயங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் அளவுக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. அங்குள்ள மருத்துவர்கள், வழக்கமாக அது ஒற்றைத் தலைவலி என்றுதான் அவரிடம் தெரிவித்துள்ளார்கள்.
cyclic vomiting syndrome
இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டில் அவருக்கு cyclic vomiting syndrome இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
CVS என அழைக்கப்படும் இந்த குறைபாடானது, குடல்-மூளை தொடர்புகளின் நாள்பட்ட கோளாறாகும். இது நோயாளிகளுக்கு கடுமையான குமட்டல், வாந்தி மற்றும் வாந்தி போன்ற திடீர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதை எந்த பரிசோதனையாலும் கண்டறிய முடியாது. நோயாளியின் வாந்தி எடுத்த வரலாற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலமே கண்டறிய முடியும்.
இது, பெண்கள், இளைஞர்கள் மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாற்றைக் கொண்ட ஒற்றைத் தலைவலி உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
தீவிரம் குறைவு
நோயாளிகள் பெரும்பாலும், இதை வயிற்று பிரச்சினை அல்லது உணவு விஷம்(Food poison) என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
வாந்தியால் அவதிப்படும் நாட்களில், நாள் முழுவதும் வைட்டமின் கலந்த தண்ணீர் மட்டுமே அருந்த முடியும்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், "இது ஒரு கோளாறு என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் வேலை செய்யாமல் இருக்க, அதிகமாக நாடகத்தனமாக நடந்துகொள்கிறேன் என்று அவர்கள் நினைப்பார்கள். இதனால் சிறுது காலம் இதை மற்றவர்களிடம் மறைத்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
தற்போது மருந்துங்கள் மூலம் அதை எதிர்கொண்டு வருகிறார். ஒவ்வொரு வாரமும் வாந்தி வரும், ஆனால் அவை முன்பை விடக் குறைவாகவும் தீவிரம் குறைவாகவும் இருக்கும். அவை 4-5 நாட்களுக்குப் பதிலாக 1-2 நாட்கள் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |