லண்டனில் பரபரப்பான காலை நேரத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்
லண்டனில் பேருந்து மோதியதில் 30களில் உள்ள பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு லண்டனில் தான் இச்சம்பவம் வெள்ளியன்று காலை 9 மணிக்கு பரபரப்பாக மக்கள் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் நடந்துள்ளது.
இது தொடர்பாக லண்டன் ஆம்புலன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆம்புலன்ஸ் குழுவினர், ஒரு காரில் ஒரு மருத்துவர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற முடியவில்லை, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என கூறியுள்ளார்.
இதனிடையில் சம்பவ இடத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பேருந்து மோதியதில் அப்பெண் அங்கேயே உயிரிழந்துவிட்டார் என்பதை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.