லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்த புலம்பெயர்ந்த பெண்! குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்க முடியாத சூழ்நிலை
லண்டனில் இரயில் நிலையத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு பொலிசார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
போர்ச்சுகலை சேர்ந்த Monique Ribeiro என்ற 45 வயதான பெண் கடந்த மாதம் 17ஆம் திகதி நார்த்பீல்ட் சுரங்க இரயில் நிலையத்தில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவ உதவி குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்த போதும் பலனின்றி அதே இடத்தில் உயிரிழந்தார்.
1976 நவம்பர் 19ஆம் திகதி பிறந்த Monique போர்சுகலை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு தென்னாப்பிரிக்காவில் உறவினர்கள் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
விரிவான விசாரணைகள் இருந்தபோதிலும், Monique மரணித்த சோகமான செய்தியைத் தெரிவிக்க அவரது உறவினர்கள் எவரையும் பொலிஸ் அதிகாரிகள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை.
இந்த நிலையில் அவரின் புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
Monique மற்றும் அவர் உறவினர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அவசரமாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.