இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த குழந்தை: பெண் செய்த பயங்கர செயல்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் தன் பேத்தியைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார் ஒரு பெண்.
பொலிஸ் விசாரணையில், அந்தக் குழந்தையின் தாயே அவளைக் கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது.
திருமண வாழ்வுக்கு தடையாக இருந்த குழந்தை
ஆந்திரப்பிரதேசத்திலுள்ள திருப்பதியைச் சேர்ந்தவர் ஆஷாலதா. ஒன்றரையாண்டுகளுக்கு முன் தன் கணவரைப் பிரிந்துள்ளார் லதா. அவருக்கு ஒன்றரை வயதுள்ள பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகம் வாயிலாக ரெட்டி குமார் (21) என்னும் இளைஞரை சந்தித்துள்ளார் லதா.
கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். ஆனால், ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளதால், லதாவை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்கள் குமார் குடும்பத்தினர்.
ஆகவே, அந்தக் குழந்தை நம்முடன் இருந்தால் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என கூறிவந்துள்ளார் குமார்.
ஆக, கடந்த வாரம், அதாவது, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குமார் மற்றும் அவரது நண்பரான ராமு ஆகியோர் உதவியுடன் தன் குழந்தையைக் கொன்று ஆற்றங்கரையில் புதைத்துள்ளார் லதா.
குழந்தையைக் காணாமல் தேடிய குழந்தையின் பாட்டி பொலிசில் புகாரளிக்க, பொலிஸ் விசாரணையின்போது, குழந்தையைக் கொன்று ஆற்றங்கரையில் புதைத்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர் லதாவும் குமாரும்.
அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவிய ராமு தலைமறைவாகிவிட, அவரை தேடிவருகிறார்கள் பொலிசார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |