மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார்
இந்தியாவில் கட்டுக்கட்டான பணம் தனது வங்கி கணக்கில் தவறுதலாக வந்ததை மறைக்க பார்த்து லொட்டரி ஜாக்பாட் விழுந்ததாக பொய் சொன்ன நபர் இறுதியில் உரியவருக்கு பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
மும்பை-யில் மிரா சாலையில் வசிக்கும் 38 வயதான பெண் இண்டர்நெட் பேங்கிங் வாயிலாகத் தனது உறவினருக்கு சுமார் ரூ. 31 லட்சம் (இலங்கை மதிப்பில்) அனுப்ப முயற்சி செய்துள்ளார்.
அப்போது தவறான வங்கி கணக்கு எண்-ஐ பதிவு செய்து பணம் அனுப்பியுள்ளார். இந்தத் தவறு மூலம் மும்பையைச் சேர்ந்த மற்றொரு நபரின் வங்கி கணக்கிற்கு அப்பெண்ணின் பணம் வந்துள்ளது.
இதன் பின்பும் அப்பெண் வங்கியை அணுகியுள்ளார், தவறு அவருடையது என்றதால் வங்கிகள் உதவ மறுத்துவிட்டது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த நிலையில் அப்பெண் ஒரு முடிவு செய்தார்.
அதன்படி காவல் நிலையத்தின் சைபர் செல் பிரிவில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்ற சைபர் பிரிவு பொலிசார் அவ்வங்கி கணக்கின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு அப்பெண்ணின் பணத்தைக் கொடுக்கப் போலீசார் கோரியுள்ளனர்.
ரூ. 31 லட்சத்தை பெற்ற வங்கி உரிமையாளர் தனக்கு இது லொட்டரி மூலம் அடித்த ஜாக்பாட் பணம் எனக் கூறி பணத்தைக் கொடுக்க மறுத்தார். ஆனால் பொலிசார் கண்டிப்பான பேச்சிலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியதால் அடுத்த இரண்டு நாட்களில் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
லொட்டரியில் பரிசு விழுந்ததாக பொய் சொன்னவர் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை.