வீட்டு வாசலுக்கு வந்த பெண் முன்னால் திடீரென படமெடுத்து விஸ்வரூபமாக நின்ற பாம்பு! பதைபதைக்கும் வீடியோ
அமெரிக்காவில் வீட்டிலிருந்து பெண்ணொருவர் வெளியில் வந்த போது அவர் எதிரில் பெரிய பாம்பு திடீரென படமெடுத்து நின்ற திக் திக் வீடியோ வெளியாகியுள்ளது.
டெக்ஸாஸை சேர்ந்த சவுன்வா லிகாம்பெக்ட் என்ற பெண் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
அப்போது சுவருக்கு அருகே சவுன்வா வந்த போது புதரில் ஒளிந்திருந்த ஒரு பெரிய பாம்பு தீடீரன அவர் முன்னர் படமெடுத்து விஸ்வரூபத்துடன் நின்றது.
இதை பார்த்த ஒரு நொடி சவுன்வாவுக்கு இதயமே நின்றுவிட்டது என கூறினால் அது மிகையாகாது! அந்த அளவுக்கு அதிர்ச்சியடைந்த அவர் பயத்தில் அலறியபடி மீண்டும் வீட்டுக்குள் ஓடினார்.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்து தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து சவுன்வா கூறுகையில், திடீரென என் முன்னர் பாம்பு படமெடுத்ததை பார்த்த நொடியில் கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலில் சென்றுவிட்டேன். என் காலுக்கு அருகே விஸ்வரூபம் எடுத்து பாம்பானது நின்றது என கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அவர் சமூவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த பலரும் நல்ல வேளையாக நீங்கள் பாம்பால் எந்தவொரு பாதிப்பும் அடையாமல் தப்பித்து கொண்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.