மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கொட்லாந்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள்
துபாயில் நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது.
மகளிர் டி20 உலகக்கோப்பை
மகளிர் ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று துபாயில் நடந்தது.
முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில் சஸ்கியா (11), சாரா (2) இருவரும் ஆட்டமிழக்க அணி தடுமாறியது.
பின்னர் வந்த கேப்டன் கேத்ரின் பிரிஸ் 25 ஓட்டங்களும், அலிசா லிஸ்டர் 26 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களம் கண்ட வீராங்கனைகள் மேற்கிந்திய தீவுகளின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் ஓட்டங்கள் எடுக்க திணறியது.
மேற்கிந்திய தீவுகள் வெற்றி
இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களே எடுத்தது. அஃபி பிளெட்சர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், 11.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கியானா ஜோசப் 31 (18) ஓட்டங்களும், டீன்ட்ரா டோட்டின் 28 (15) ஓட்டங்களும் விளாசினர்.
ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |