கணவர் இறந்து 5 ஆண்டுகள் கழித்து அவர் குழந்தையை கருவில் சுமக்க முயலும் இளம்பெண்!
உயிரிழந்த கணவரின் குழந்தையை வயிற்றில் சுமக்க போராடும் இளம்பெண்.
அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் மறைந்த தனது கணவரின் விந்தணுவை IVF சிகிச்சை மூலம் பயன்படுத்தி கருத்தரிக்க முயன்று வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாபி போவீல் (33). இவர் ஜோஷ் என்பவரை கடந்த 2014ல் கால்பந்து போட்டியின் போது பார்த்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பின்னர் கடந்த 2016 மே மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்த நடந்த நிலையில் அதே ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில வாரங்களில் synovial sarcoma எனப்படும் அரியவகை புற்றுநோயால் ஜோஷ் உயிரிழந்தார்.
ஜோஷ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது விந்தணுவை பாதுகாத்து வைக்க குடும்பத்தாரிடம் கோரினார். ஏனெனில் தனது இறப்பிற்கு பிறகு தன் மனைவி அந்த விந்தணு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற ஜோஷ் விரும்பினார்.
yahoo
இந்நிலையில் ஜோஷ் மனைவி போவீல் எளிதாகவோ அல்லது விரைவாகவோ இது தொடர்பில் முடிவெடுக்கவில்லை, தான் IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற தயாராக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள நான்கு ஆண்டுகள் எடுத்து கொண்டார்.
அதன்படி கடந்தாண்டு தான் அதற்கான சிகிச்சையை தொடங்கியிருக்கிறார். போவீஸ் கூறுகையில், ஜோஷ் என்னிடம் என்னுடைய உயிர் மீண்டும் வாழ்வது எப்படியிருக்கும், நீ மகிழ்ச்சியான அம்மாவாக இருப்பாய் என கூறியிருந்தார்.
நான் சரியான முடிவுகளை எடுக்க விரும்பினேன், சரியான காரணங்களுக்காக அதைச் செய்ய விரும்பினேன், அதனால் நான் நான்கு வருடங்கள் எடுத்து கொண்டேன். அதோடு கொரோனா லாக் டவுன் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டது.
இந்த சிகிச்சை முறை எனக்கு சிக்கலானதாகவே இருக்கிறது. நான் குழந்தை பெற்று கொள்ள 50 சதவீத வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். ஆரோக்கியமான கரு மூலம் நான் கருத்தரிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, முடிவு எப்படியிருந்தாலும் சிகிச்சையை தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.
FABI POWELL INSTAGRAM