இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம்
மரணத்திற்கு பின்னர் நடக்கும் விடயம் குறித்து 8 நிமிடங்கள் இறந்து உயிர் பிழைத்த பெண் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த 33 வயதான பிரியானா லாஃபர்டி என்ற பெண், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இது கழுத்து, உடல், மற்றும் கைகளை பாதிக்கும் அரிய நரம்பியல் கோளாறாகும். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லாவிட்டாலும், மருந்துகள் மூலம் அறிகுறிகளை நிர்வகிக்கலாம்.
மரணத்திற்கு பின்னர்..
2017 ஆம் ஆண்டு ஆபத்தான சோடியம் குறைந்ததால், அவரின் இதயம் 8 நிமிடங்களுக்கு நின்றது. அதன் பிறகு அவர் உயிர் பிழைத்து விட்டார்.
இந்த 8 நிமிடங்களில் நடந்தது குறித்து பிரியானா லாஃபர்டி பேசியுள்ளார்.
என் உடல் கைவிடப்பட்ட பிறகு, "தயாராக இருக்கிறீர்களா?" என்று ஒரு குரலை கேட்டது, அதன் பின்னர் முழு இருளில் மூழ்கியது. அப்போதும் உணர்வு தன்னுடன் தொடர்ந்தது. மரணம் என்பது ஒரு மாயை. ஏனென்றால், நமது ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது நினைவு உயிருடன் இருக்கும்.
இந்த வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலையை முற்றிலும் மறுத்தது. அந்த உலகத்தில் எந்த பயமும் இல்லை, தவிர்க்க முடியாத அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது அங்கு நேரம் ஒன்று இருந்தது போன்று தெரியவில்லை. ஏதோ ஒன்று நிபந்தனையற்ற அன்புடன் நம்மை சரியாக வழிநடத்துவது போன்று இருந்தது" என கூறியுள்ளார்.
மரணத்தின் பின்னர் நடக்கும் விடயங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மரணத்தினை நெருங்கும் தருவாயில், வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகளை விரைவாக நினைவு கூரும் என்பது 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |