பெண்களின் இனி இதற்கு மட்டும் தான்! தாலிபான் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு: கடும் அதிர்ச்சியில் ஆப்கான் பெண்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், பெண்களுக்கான பணி குழந்தை பெறுவது தான் பணி என்று தாலிபான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்பு, ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆரம்பத்தில், பெண்கள் மதிக்கப்படுவர், அவர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுவர் என்று தாலிபான் அமைப்பு கூறியது.
ஆனால், தற்போது அது அப்படியே மாறிபோயுள்ளது. பெண்கள் விளையாட தடை, இசை பயில தடை என பல்வேறு சட்டங்களை தாலிபான்கள் கொண்டு வருகின்றனர்
அந்த வகையில், தற்போது தலிபான் செய்தித் தொடா்பாளா் சையது ஜகருல்லா ஹாஷிமி, அமைச்சா் பொறுப்பை பெண்களால் வகிக்க முடியாது. அது, அவா்களால் சுமக்க முடியாத பாரத்தை அவா்களது தலையில் சுமத்துவதைப் போன்றது.
அவர்கள் பணி குழந்தை பெற்றெடுப்பது மட்டும் தான், பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு போராடுபவா்கள் அனைவரும், ஆப்கன் பெண்களின் பிரதிநிதிகள் கிடையாது என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அங்கிருக்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள் பலரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.