லண்டனில் நள்ளிரவு விபத்தில் உயிரிழந்த சிறுவன் யார்? புகைப்படத்தை வெளியிட்டு குடும்பத்தினர் வைத்துள்ள கோரிக்கை
லண்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் இ-ஸ்கூட்டரில் பயணித்த போது, திடீரென்று நடந்த விபத்தின் காரணமாக உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் மற்றும் விபரம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bromley-வில் கடந்த 18-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் Southborough Lane மற்றும் இ-ஸ்கூட்டர் இரண்டும் மோதிக் கொண்ட விபத்தில், 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விபத்தில் சிக்கிய அந்த காரின் டிரைவர், காரோடு தப்பி ஓட, இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, விரைந்து வந்த பொலிசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின் மறுநாள் அந்த காரை ஓட்டிச் சென்ற 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் பொலிசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
அவன் மீது ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்துவது, விபத்திற்கு பின் வாகனத்தை நிறுத்தாமல் சென்றது, மது அருந்தியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
ஆனால், உயிரிழந்த சிறுவன் யார் என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த சிறுவனுக்கு 16 வயது இருக்கும் எனவும், அவனின் பெயர் Junior Shay Alexander என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், Junior Shay Alexander ஒரு அற்புதமான மகன், அவன் எங்கள் குடும்பத்தில் அனைவரையும் நேசித்தான்.
அவனின் இழப்பு எங்களால் தாங்க முடியாத ஒன்று, இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் எந்த ஒரு சிறிய தகவலாக இருந்தாலும், அது பெரிதும் உதவும் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.