மக்களுக்கு தலா 1400 டொலர்கள் வழங்கும் பணி துவங்கப்படுகிறது! ஜோ பைடன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர்கள் வழங்கும் பணி துவக்கப்படவுள்ளது தொடர்பான முக்கிய தகவலை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை.
இந்த பெரும் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது. கொரோனாவால் ஏராளமான அமெரிக்கர்களும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டுவந்தார். இதற்கான கொரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த நிவாரண மசோதா குறித்து ஜோ பைடன் கூறுகையில், இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள்.
திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர்கள் வழங்கும் பணி துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்.