விவசாய சீரமைப்பிற்கு பெரும் தொகையை பெறவுள்ள உக்ரைன்: உதவிய உலக வங்கி
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மீண்டும் தங்களது விவசாயத்தை தொடங்க உலக வங்கி உதவி செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட உணவு உற்பத்தி
பாதிப்பு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது வருட கணக்கில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த தாக்குதல் நடவடிக்கையின் மூலம் உலகின் நடுத்தர மற்றும் ஏழ்மை நாடுகள் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் உலகின் தானிய உற்பத்தியில் உக்ரைனும், ரஷ்யாவும் முக்கிய முதன்மை நாடுகளாக இருப்பது தான்.
ஒரு பக்கம் ரஷ்யா மீதான உலக நாடுகளின் தடை, மறுபக்கம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் தடைபட்டு போன தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி. அத்துடன் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்ய வீரர்கள் பெரும்பாலான உக்ரைனிய விளை நிலங்களை எரித்து நாசமாக்கியது.
இதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததுடன் மட்டுமல்லாமல், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து மக்களை பாதித்தது.
Ukraine will receive 550 million dollars from the World Bank to restore agriculture. pic.twitter.com/jB7PjkZHbu
— NEXTA (@nexta_tv) November 8, 2023
ஆனால் தற்போது தாக்குதல் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்து மீண்டும் உக்ரைனில் விவசாய உற்பத்தி சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விவசாயத்தை நாட்டில் மீண்டும் சீரமைப்பதற்காக உலக வங்கியிடம் இருந்து 550 மில்லியன் டொலர் தொகையை உக்ரைன் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |