மிகப் பெரிய சிக்கல்... பாதிக்கப்படும் மில்லியன் கணக்கிலான மக்கள்: நிபுணர்கள் அச்சம்
கொரோனா பெருந்தொற்று மிக விரைவில் முடிவுக்கு வந்தாலும், அந்த தொற்றின் பாதிப்பு பல ஆண்டுகளுக்கு மக்களில் நீடிக்கும் என நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இளையோர்கள், மருத்துவ ரீதியாக முன்னர் ஆரோக்கியமாக இருந்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பக்கவிளைவுகளால் அவதிப்படலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றே நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்றின் தாக்கம் மக்களில் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தரப்பு முன்னெடுத்த ஆய்வில், கவலையளிக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக உடல் ஆரோக்கியத்துடன் காணப்படும் இளையோர்கள், மற்றும் மருத்துவ ரீதியாக சிக்கல் ஏதும் இல்லாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மில்லியன் கணக்கான மக்கள், அந்த தொற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளால் பல ஆண்டுகள் அவதிப்படும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஓமிக்ரான் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கே இந்த நிலை என Dr Leonard Jason சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொருளாதார மற்றும் சுகாதார அமைப்புகளில் பெரும் தாக்கத்தை அது ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் எந்த நாட்டிலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 10ல் இருந்து 30% மக்கள் நீண்ட காலம் அதன் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவார்கள் என்றே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லேசான பாதிப்பு என கூறப்படும் வாசனை உணர்வை இழப்பது அல்லது அவ்வப்போது ஏற்படும் தலைவலி உள்ளிட்டவையால் அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறும் நிலை கூட ஏற்படலாம் என்கிறார் அவர்.
மேலும், மிகுந்த சோர்வு, அடிக்கடி ஏற்படும் உடல் வலிகள் அல்லது உணர்வு சார்ந்த பிரச்சனைகளைலால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் ஒருகட்டத்தில் தமது வேலையை விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்படலாம் என்கிறார் Dr Leonard Jason, இதனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம்.
பலர் தம்மை கவனித்துக்கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்யும் நிலைக்கே தள்ளப்படலாம், இதனால் சமூகத்தில் இருந்து விலகியிருக்கும் சூழலும் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நீண்ட கால கொரோனா பக்கவிளைவுகள் என்பது சிலருக்கு குணமடைந்த சில வாரங்களில் உருவாரும் சிலருக்கு சில மாதங்களுக்கு பின்னர் உருவாகும் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தமட்டில் 40% மக்கள் ஒருகட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார்கள் எனில், அதில் 10% மக்களுக்கு நீண்ட கால பக்கவிளைவுகள் உறுதி என தெரிவித்துள்ளனர்.